🖤 ஆந்தை 🖤
அண்டம்
அடங்கி
அகிலம்
உறங்க -
அபாயமென
அனைவரும்
அலரும்
இருள்
சூழ்ந்த
வேளையில்..
அச்சமயம்
ஆபத்தை
அச்சமின்றி
எதிர்கொள்ளும்
ஆந்தை!!!
🖤 சூழ்நிலைகளின்
கைதிகளாய்
பிணைத்துக் கொள்ளாமல் -
விடுதலை
எண்ணங்களில்
வண்ணம் பூசி
விடுவித்துக் கொள்ளுங்கள் 🖤
🖤 மருத்துவர்.சரண்யா நாகலிங்கம் 🖤
🤍 முன்னுரிமை 🤍
மனித உறவுகள்
உணர்வுகளால்
பிணைக்கப்பட்டால்
மட்டுமே
மட்டற்ற
மகிழ்ச்சியினை
தரும் -
இல்லையெனில்
அனுதினமும்
அளவற்ற
மன உளச்சலில்
மனம்
ஊசலாடும்!!!
நம் வாழ்வில்
உடன் வரும்
உறவுகளை
மதிக்க - நம்
மனம்
தவறி விடுகிறது!!!
உளமார
நேசிக்கும்
உறவுகளை
உதாசீனப்படுத்தி
உள்ளத்தை
உருகுலைத்து
மனதினை
ஊனமாக்கி
தவிக்க விடுவதேனோ?
மனித மனம்
விசித்திரமானது -
நெருங்க இயலா
உறவுகளிடம்
நெருங்கி
வெறுக்க முடியா
உறவுகளை
வெறுத்து
மறக்க முடியாத
மனதினை
மரக்கடிக்கும்!!
🤍 முன்னுரிமை
கொடுக்கும்
உறவுகளை
உள்ளத்தோடு
அணைத்து
பேணி காப்போம் -
அகத்தின்
வடுக்களை
ஆற்றும் வல்லமை
அதனுள்ளே
ஊடுருவும்
குருதியினால் மட்டுமே
இயலும் - நாமும்
சிலர் வாழ்வில்
குருதியாய்
வாழ்ந்திடுவோமாக!!! 🤍
🤍 மருத்துவர்.சரண்யா நாகலிங்கம் 🤍
🖤 கானல் 🖤
கலையாத
கனவில்
கதைகள் கூறி
கலந்துரையாட
காற்றினில்
கலந்திடும்
கனாக்கள் -
கானல் நீரென
காணாமல்
கரைந்திட -
கனத்திடும்
கண்கள்
கண்ணீரின்
கர்ஜனையில்
கதி கலங்கிட
கனாவில்
கண்டதை
காவியமென
கருதிய
காரிகை -
கானல் நீரினுள்
காணாமல் போனாள்!!
🖤 மருத்துவர்.சரண்யா நாகலிங்கம் 🖤
❤️ மௌன சிறை ❤️
உன்னத உறவு -
உணர்வுகள்
ஊடுருவும் வரையில்!
உயர்வான பொருள் -
இழக்கும் வரையில்!
உறவுகளின் அருமை
உடன் வரும் வரை
உற்றார் உணர்வதில்லை!
இழந்த உறவுகளின்
இடத்தை நிறைக்க
இன்னொரு நபர்
இலகுவாய் இடம்பெயர -
இந்த உறவின்
இழப்பை உணரா
உறவுகளுக்காக -
இரவுகள் விழித்து
இருவிழி நனைத்து
இதயம் துடித்து
இயன்றவரை தேடினினும்
இழந்த உறவு ஏனோ
இழந்தது தான்
என்பதை உணரும்
தருவாயில் -
❤️ மீள முடியா
மௌன சிறையில்
சிக்கியிருக்கும் நம்மை
மீட்டெடுக்க முடியாமல்
மீண்டுமொரு
போராட்டத்தில் - மனது ❤️
❤️ மருத்துவர்.சரண்யா நாகலிங்கம் ❤️